அமைதியாக நின்ற சிறுவனை முட்டி தூக்கிய தாய்ப்பசு.. மகனின் உயிரை காப்பாற்றிய தந்தை.! - Seithipunal
Seithipunal


வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவனை பசு முட்டி தூக்க முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்தது.

சென்னையில் உள்ள அம்பத்தூர் அருகேயிருக்கும் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சார்ந்தவர் தினேஷ். இவரது மகன் சரத் (வயது 4). சிறுவன் சரத் தனது உறவினருடன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இதன்போது, தெருவில் பசுமாடு தனது கன்றுக்குட்டியுடன் சென்று கொண்டு இருந்தது. 

சிறுவன் வீட்டின் வாயிலில் இருந்து கதவை திறந்து வெளியே வந்தது, சிறுவனை பார்த்த பசு திடீரென ஆக்ரோஷமடைந்து அவனின் மீது கொம்புளால் முட்டி தூக்க முயற்சித்துள்ளது. இதனால் சிறுவன் அலறவே, இதனைக்கண்டு வந்த சிறுவனின் பாட்டியையும் பசு முட்டியுள்ளது. 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த தினேஷ் விரைந்து செயல்பட்டு பசுமாட்டினை விரட்டினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. சிறுவன் சரத் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டான். 

மேலும், அம்பத்தூர் பகுதிகளில் பசுமாடுகள் இதுபோன்று சுற்றி தெரிவதாகவும், அடுத்து ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Ambattur Area Cow Attacks Child in front of Home Father Save Sons Life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->