மனைவி, மகன் பிரிந்து சென்றதால் வருத்தம்.. குடிகாரன் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அமைந்தகரை எம்.எம். காலனி பகுதியை சார்ந்தவர் வீரராகவன் (வயது 47). இவர் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி (வயது 43). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். 

இந்நிலையில், மது அருந்தும் பழக்கம் வைத்திருந்த வீரராகவன், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடுமையான மன விரக்திக்கு சென்ற திலகவதி மற்றும் அவரது மகன், திலகவதியின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

இதன்போது, வீட்டில் வீரராகவன் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு சென்ற வீரராகவன், மதுபோதையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் வீரராகவனின் அலறல் சத்தம் கேட்டு, விரைந்து வந்து மீட்பதற்குள் பரிதாபமாக பலியாகியுள்ளார். பின்னர் இது குறித்து அமைந்தகரை காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீரராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Amaindakarai Drunken Culprit Suicide due to Family Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->