சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பில் கொக்கைன் போதைப்பொருள்.! உகாண்டா நாட்டு பெண் கைது.!
chennai airport police ceased Uganda women cocaine
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக போதைத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் அவர்கள் விமான நிலையத்தில் தீவிரமான கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்ய வந்துள்ளார். அவரது வித்தியாசமான நடவடிக்கைகள் போலிசாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
எனவே, போலீசார் அவரிடம் விசாரித்தனர். உகாண்டா நாட்டைச் சேர்ந்த அந்தப்பெண் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரது உடைமைகளில் சோதனை போட்டனர்.
அவரது ஆடைக்குள்ளும்,உடலுக்குள்ளும் மறைத்து வைத்து கொக்கைன் போதைப்பொருள் கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 3.250 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.35 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது.
English Summary
chennai airport police ceased Uganda women cocaine