பறந்து வந்த பெட்ரோல் குண்டு.. சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்..!
Chennai ADMK Supporter Murder Police Encounter Issue Update 25 April 2021
கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற அதிமுக பிரமுகர் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்புக்கு சென்ற காவல் அதிகாரி என்கவுண்டர் செய்ததால் ரவுடி சம்பவ இடத்தில் பலியானான்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன், அதிமுக பிரமுகராக இருந்து வருகிறார். தொழில் போட்டி காரணமாக திருமாறனுக்கு பல எதிரிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் வருடம் திருப்போரூரில் கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில், அதில் அதிர்ஷ்டவசமாக திருமாறன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து தனது பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் கோரிக்கை வைக்க, ஆயுதமேந்திய பாதுகாவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி மறைமலை நகர் 7வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில், தேர்தல் நடக்காமல் நின்று போனது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனது வீட்டருகே உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற நிலையில், கோவிலுக்குள் வந்த மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் நிலைதடுமாறி விழுந்த திருமாறனின் முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளது.
நிலைமையை உணர்ந்த பாதுகாப்பு காவல் அதிகாரி மர்ம கும்பலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடவே, சேலம் ஆத்தூரை சேர்ந்த கூலிப்படை ரவுடி சுரேஷ் என்பவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். மற்றொரு குற்றவாளி காயத்துடன் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai ADMK Supporter Murder Police Encounter Issue Update 25 April 2021