பாத்ரூமில் இருந்த சுடுதண்ணி.. அலறித்துடித்து பலியான சிறுமி.. பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்..!
Chennai 4 Year Child died Boiled water
சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மீனா. இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய சர்வினி என்ற மகள் இருக்கிறார். மீனா, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி குழந்தையை குளிக்க வைக்க சுடுதண்ணீரை குளியலறையில் வைத்துள்ளார்.
இதன்பின்னர் மற்றொரு பணி வந்ததை அடுத்து அதனை கவனிக்க செல்லவே, சிறுமி அங்கும் இங்குமாமாக ஓடி விளையாடிக்கொண்டு திடீரென அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா மற்றும் மணிகண்டன் விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது சிறுமி தரையில் கிடந்த நிலையில், சுடுதண்ணீரும் சிறுமியின் மீது இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கவே, கடந்த 20 நாட்களுக்கும் அதிகமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai 4 Year Child died Boiled water