குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்களே கவனமாக இருங்கள்.. சென்னையில் அரங்கேறிய சோகம்.!!
Chennai 3 year child died due to TV Slipped
சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் அகரம் தென், சத்யா நகரை சார்ந்தவர் பாலாஜி. இவர் வீட்டின் அலமாரியில் தொலைக்காட்சி பெட்டி அருகே அலைபேசியை சார்ஜ் போட்டு வைத்துள்ளார்.
இவரது அலைபேசிக்கு அந்த நேரத்தில் அழைப்பு வந்துள்ளது. அலைபேசியின் மணிச்சத்தம் கேட்டதும், பாலாஜியின் 3 வயது குழந்தையான கவியரசு, விரைந்து சென்று அலைபேசியை எடுத்துள்ளார்.
இதில், எதிர்பாராத விதமாக தொலைக்காட்சி சார்ஜ் வயரில் சிக்கிக்கொண்டு, குழந்தையின் மீது விழுந்துள்ளது. வீட்டிற்குள் எதோ ஒரு பொருள் விழுவதாக சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் விரைந்த பெற்றோருக்கு, குழந்தையின் மீது தொலைக்காட்சி விழுந்தது தெரியவந்துள்ளது.
சிறுவனை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்ற நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai 3 year child died due to TV Slipped