கல்லூரி பேராசிரியர் என்ற பெயரில் காமுகன்.. சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள அரும்பாக்கம் பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார். இதே கல்லூரியில், வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த காமுகன் லோகேஷ் (வயது 26) என்பவன் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளான். 

மாணவியை காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்ட காமுக பேராசிரியர், முதலில் நட்பாக பேசி காதல் வார்த்தைகளை அள்ளிவிட்டு காதலை வளர்த்துள்ளான். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற கொடூரன், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறியுள்ளான். 

இதன்பின்னர் சிறுமியிடம் பேசுவதை லோகேஷ் தவிர்த்து வந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த சிறுமி, அவனது இல்லத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளார். அப்போது அதிர்ச்சி தகவலாக, மற்றொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தவே, அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்து அவதூறாக பேசியுள்ளான். இதனையடுத்து சிறுமி அங்குள்ள வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் காமுக பேராசிரியர் லோகேஷை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai 17 Year girl sexual abuse by Drama Love College Lecturer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->