செங்கல்வராய நாயகரின் கொள்ளுபேத்தியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலியில் கிடைத்த மரியாதை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், சென்னையில் உள்ள வேப்பேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (48). செங்கல்வராய நாயகரின் கொள்ளுபேத்தியான இவர், கடந்த 1991-ம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். 

இந்த மாதம் 11-ம் தேதி உடல் நலக்குறைவால், ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவரது இறுதி அஞ்சலி ராயபுரத்தில் நடைபெற்றது. அவர் மறைந்த செய்தி அவருடன் பணியாற்றிவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரைக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த 12-ம் தேதி ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். காசிமேடு மயானத்துக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடல் அடக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது துணை கமிஷனர் சுப்புலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரமணி, இந்திராணி, ஏட்டு வரலட்சுமி மற்றும் பெண் போலீஸார் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவியின் உடலை தோளில் சுமந்தபடி காசிமேடு மயானத்திற்கு கொண்டு சென்றார்கள். துணை கமிஷனர் சுப்புலட்சுமியின் இந்தச் செயல் காவல்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இது செயல் குறித்து, துணை கமிஷனர் சுப்புலட்சுமி பேசியபோது, "இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்தும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்றேன். தகன மையத்துக்கு ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கியபோது நானும் சுமந்து சென்றேன்" என்றவரிடம் உயரதிகாரியாக இருக்கும் நீங்கள் இன்ஸ்பெக்டரின் சடலத்தைத் தூக்கியது சக காவலர்கள் மத்தியில் உங்கள் மீதான மரியாதையை உயர்த்தியுள்ளதே? என்று கேட்டதற்கு, "அந்த நேரத்தில் அப்படி தோன்றியதால் ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கிச் சென்றேன்" என்று கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, விளையாட்டு வீராங்கனையாக இருந்த தன் சிறுவயதிலிருந்தே காவல் துறையில் சேர வேண்டும் என்ற கனவோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalvaraya naicker grand daughter last furneral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->