கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட அக்கா - தங்கை... கண்ணீரில் துடிதுடித்துப்போன பெற்றோர்.!
Chengalpattu sisters Mystery Death Police Investigation 11 November 2020
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தை அடுத்த ஆமைப்பாக்கம் கிராமத்தைச் சார்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி சீதா. இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு பிரியங்கா, செண்பகவல்லி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று வழக்கம் போல பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியபோது மகள்கள் வீட்டில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். அவர்களை இரவு முழுவதும் தேடி அலைந்த நிலையில், இன்று காலை சடலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, பொதுமக்கள் உதவியுடன் இருவரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இவர்கள் இருவரும் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 16 வயதுடைய பிரியங்கா அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், 12 வயதாகும் இளைய மகள் செண்பகவல்லி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chengalpattu sisters Mystery Death Police Investigation 11 November 2020