கல்பாக்கம்: வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து.. பெண் பலி..!!
Chengalpattu Kalpakkam Car Bike Crash Woman died
இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த கார் மோதிய விவகாரத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான சக்திவேல், இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு கனிமொழி என்ற மகள் இருக்கிறாள். கனிமொழிக்கு உடல்நிலை சரியில்லாததால் கணவரின் தம்பி சஞ்சய் என்பவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பு அருகே செல்கையில் வேகமாக வந்த கார் ஒன்று இவர்களின் பைக் மீது பலமாக மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கல்பாக்கம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பில் உள்ள அணுசக்திதுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். கனிமொழி மற்றும் சஞ்சய் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chengalpattu Kalpakkam Car Bike Crash Woman died