கணவன் சின்னவீட்டிற்கு சென்றதும், மனைவி மற்றொரு வீட்டுடன் குஜால்.. வெறித்தனமாக அரங்கேறிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திருப்போரூர் - கூடுவாஞ்சேரி சாலையில் இருக்கும் அஸ்தினாபுரம் கிராமத்தை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவரது மனைவி மாலா. சென்னையில் உள்ள கண்ணகி நகரில் மகேந்திரனிற்கு மற்றொரு மனைவியும் இருக்கிறார். இதனால் மகேந்திரன் இரண்டு வீட்டிலும் மாறி, மாறி வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், மகேந்திரன் மற்றொரு வீட்டிற்கு செல்லும் போது, மாளவிற்கு அதே பகுதியை சார்ந்த முனுசாமி (வயது 28) எனபவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த மகேந்திரன் முனுசாமி மற்றும் மாலாவை கண்டித்த நிலையில், இருவரும் இதனை கேட்கவில்லை. இந்நிலயிக்கிள், நேற்று மாலை நேரத்தில் மாந்திரன் அஸ்தினாபுரத்திற்கு தனது நண்பர்களுடன் வருகை தரவே, முனுசாமியை மது அருந்த அழைத்துள்ளார். அங்குள்ள மதில்சுவர் வயல் பகுதியில் அனைவரும் மது அருந்திய நிலையில், இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த மகேந்திரன், முன்னதாக திட்டமிடப்பட்டு எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து முனுசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த முனுசாமி மயங்கியதால், அவர் இறந்துவிட்டதாக எண்ணி அனைவரும் தப்பி சென்றுள்ளனர். முனுசாமி இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், முனுசாமியிடம் வாக்குமூலம் பெற்று, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மகேந்திரனின் மனைவி மாலா மற்றும் மேகநாதனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Illegal affair Murder Attempt Police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->