விவாகரத்து கேட்ட மனைவி.. கத்தியால் குத்தி, வீதியில் இழுத்துப்போட்டு கொலை செய்த கொடூர கணவன்.! - Seithipunal
Seithipunal


விவாகரத்து கோரிய மனைவியை சந்தேக புத்தியால் கணவர் காரை ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஆனந்த நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த தம்பதி மருத்துவர் கோகுல் குமார் - கீர்த்தனா. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில், கீர்த்தனாவை கத்தியால் குத்தி படுகொலை செய்த கோகுல், கீர்த்தனாவை கார் ஏற்றி கொலை செய்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வருகையில், கொடூரன் கோகுல் காரில் தப்பிச் சென்றுள்ளான். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டிற்குள் உயிருக்கு போராடிய பெண்ணின் தாய், மற்றும் தந்தையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான மருத்துவர் கோகுல் குமார், தன்னைவிட 7 வயது குறைவான மதுராந்தகம் பகுதியைச் சார்ந்த கீர்த்தனாவை மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்ற வந்த கோகுல் குமாருக்கும், மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரியில் எச்.ஆர் நிர்வாகத்தில் பணியாற்றி வந்த கீர்தனவிற்கும் குழந்தை இல்லை. 

இந்த சூழ்நிலையில், கடந்த 10 மாதங்களாக மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கோகுல் குமாருக்கு, கீர்த்தனா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கீர்த்தனா விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில், காரில் வந்த கோகுல் குமார் சமாதான பேசுவதாக கூறி, கீர்த்தனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதன்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் கத்தியை எடுத்து கீர்த்தனாவை சரமாரியாக குத்தி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தடுக்க வந்த கீர்த்தனாவின் தந்தையையும், தாயையும் கத்தியால் குத்திய நிலையில், ஆத்திரம் தீராமல் தலைமுடியை பிடித்து இழுத்து தெருவில் போட்டு, காரை ஏற்றி கொலை செய்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த காவல் துறையினர், விரைந்து பிற காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, அச்சரப்பாக்கம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்ற போது விபத்திற்குள்ளாகி அதில் சிக்கியிருந்த கோகுல் குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Doctor Murdered his Wife due to Affair Doubts 20 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->