சொத்தை எழுதி வாங்கி கொண்டு, மோசடி செய்த மகன்.! வசமாக வைத்த செக்.!
cheating song on nellai
நெல்லையில் தந்தையிடம் இருந்து சொத்தை எழுதி வாங்கிகொண்டு, தந்தையை கைவிட்ட மகனிடம் மீண்டும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 85 வயதான பூதத்தான் என்ற முதியவர் தன்னை பராமரிக்க ஒப்பு கொண்ட இளைய மகனான முருகனுக்கு சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். வேண்டியது கிடைத்த உடன் முருகன் தந்தையை வீட்டிலிருந்து வெளியேற்றி அனுப்பி இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து அவர் தனது மூத்தமகனுடன் சேர்ந்து முறையிட்டது இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த முருகன் தனது தந்தை மற்றும் சகோதரனை அரிவாளால் வெட்டி இருக்கின்றார். படுகாயமடைந்த இருவரும் அளித்த புகாரின் பேரில், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் முருகனின் குற்றம் உறுதியாகி இருப்பதால், அவரிடமிருந்து 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டு மீண்டும் பூதத்தான் பெயருக்கு மாற்றி எழுதி அரசாணை வழங்கப்பட்டுள்ளது.