'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பாணியில் காதலியுடன் திட்டம்போட்டு திருட்டு.! கதையை கேட்டா அசந்துடுவீங்க.!
chain theft in chennai
கோவிலுக்கு வரும் பெண்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை தோறும் ஜெயின்களை பறித்து வந்த இரண்டு திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
அந்த திருடர்களின் பெயர் பூபாலன் மற்றும் பாபு என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மூன்று விலையுயர்ந்த பைக்குகள், 10 சவரன் செயின், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தாங்கள் இருவரும் சிறையில் பழக்கமானவர்கள் என்றும், பூபாலன் மெக்கானிக்காகவும் பாபு பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பைக்குகளை செயின் பறிப்பு சம்பவத்திற்கு முன்பாகவே ஸ்ப்ரே பெயிண்டிங் செய்து விட்டு திருடிய பின்பு பெட்ரோலை கொண்டு அந்த பெயிண்ட்டை அழித்து விடுவார்களாம். இதனால், சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருந்துள்ளது. அடுத்து டி-ஷர்ட் மற்றும் சட்டையை அணிந்து செல்வார்களாம். திருடிய பின்பு சட்டையை கழட்டிவிட்டு, டி ஷர்ட்டுடன் வலம் வருவார்களாம்.
இவர்கள் திருடிய பொருட்கள் அனைத்தையும் தங்களுடைய காதலியடம் கொடுத்து வியாபாரம் செய்து வருகின்றனராம். திருவாடுவதற்கு முன்பாக அந்த இடத்தில் கோவிலுக்கு வரும் பெண்களை நோட்டமிட்டு அதன்பின் செயின் பறிப்பது அவர்களின் வாடிக்கை என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.