தஞ்சாவூரில் விமான நிலையம்.. மத்திய அரசு தடாலடி..!!
central govt plan to construct airport in thanjavur
தஞ்சாவூர் தமிழ் நாட்டின் ஏழாவது மிகப்பெரிய நகரமாக விளங்கி வருகின்றது. 1980களில் தஞ்சையில் விமானப் போக்குவரத்து சேவையானது நடைமுறையில் இருந்தது. அப்பொழுது தஞ்சாவூர் சிறிய நகரமாக இருந்ததால், பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து விமான சேவையானது நிறுத்தப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக தஞ்சாவூர் வளர்ந்து வந்துள்ளது. எனவே, மீண்டும் தஞ்சை விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு முதல் கட்டமாக விமான சேவையை துவங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தற்போது ஏர் டிராபிக் பணிகள் முடிவடைந்து, விமான நிலைய பணிகள் துவங்கி இருக்கின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் செப்டம்பர் மாதத்தில் விமான நிலையமானது, அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
central govt plan to construct airport in thanjavur