மித்ராவின் சிகிச்சையை வைத்து, பல குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.!
Central Govt Cancel GST for Rs 16 Crore Medicine
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் சதீஷ் குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்கள் இருவருக்கும் மித்ரா என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி கடந்த 1 மாதமாக அரியவகை மரபணு நோய் என்று அழைக்கப்படும் முதுகு தண்டுவட நார்சிதைவு நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இதனால் சிறுமி உடலால் துயரத்தை அனுபவித்து, நடக்க கூட முடியாத சூழ்நிலைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் உரிய மருத்துவம் வழங்காத பட்சத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என தெரிவித்துள்ளனர்.
சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் மருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால், அதன் இறக்குமதி வெறியுடன் ரூ.22 கோடி தேவைப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தி பொதுமக்களிடம் நிவாரண நிதி உதவி சேகரிக்க தொடங்கினர்.
சிறுமியின் சிகிச்சைக்காக ரூ.16 கோடி பணம் மருந்தின் விலையளவு கிடைத்துவிட்ட நிலையில், மருந்தை இறக்குமதி செய்ய தேவையான ரூ.6 கோடி பணம் மேலும் தேவைப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துக்கான இறக்குமதி வரியை இரத்து செய்யக்கூறி பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் கோரிக்கை வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தமிழகத்தை சார்ந்த பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினர்.
இந்நிலையில், மருந்துக்கான இறக்குமதி ஜி.எஸ்.டி வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்துள்ளார். இதனால் எவ்விதமான கூடுதல் வரிகள் இல்லாமல் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Central Govt Cancel GST for Rs 16 Crore Medicine