திருடனுக்கு செல்போன் வாங்கி கொடுத்த போலீஸ்.! பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்.!
cellphone robbery in chennai
ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல் போனை தேடிய சிறுவன் ஒருவனுக்கு போலீசே புதிய செல்போன் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
சென்னை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உடைய தந்தை பிஸ்கட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து தனது மகனை ஆன்லைனில் படிக்க வைக்க வசதி இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுவன் செல்போன் ஒன்றை திருடி இருக்கின்றான். ஏற்கனவே, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ள இரண்டு பேர் சிறுவனை உசுப்பேத்தி திருட வைத்துள்ளனர்.
ஆனால் செல்போனை திருடும் போது அந்த சிறுவன் கையும் களவுமாக சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனின் ஏழ்மை நிலை தெரிய வந்துள்ளது. பின்னர், ஒரு காவலர் தனது சொந்த செலவில் அந்த சிறுவனுக்கு புதிய மொபைல்போன் வாங்கிக் கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cellphone robbery in chennai