வாக்குச்சீட்டுக்களுக்கு தீவைக்கப்பட்ட விவகாரம்.. மேலும் 50 பேர் மீது வழக்கு..!
case filed on 50 members in firing vote
திருவள்ளூர் மாவட்டதின் பாப்பரம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில், கலவரத்தில் ஈடுபட்டதாக 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு மையத்துக்குள் புகுந்த சிலர் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றி வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து, ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டார்கள், இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக இன்று 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே இங்கு மறு வாக்குப் பதிவு குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
case filed on 50 members in firing vote