கார் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே மூவர் பலி..!
Car van head-on collision
கார் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனது நண்பர்களுடன் நேற்றிரவு காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வந்தவாசி சாலையில் வந்த போது வேன் ஓன்று அவர்களின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, அவரின் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் காவல்துறையினர் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Car van head-on collision