லாரியை முந்தி செல்ல முயன்ற கார்.! இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் பலி.!
Car twowheeler accident in karur
கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது லாரியை முந்தி செல்ல முயன்ற கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தாத்தாம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (45). சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சேட்டு(35) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது கரூர்-கோவை மெயின் ரோட்டில் சென்றபோது, கோவையில் இருந்து அரியலூர் நோக்கி வந்த கார் ஒன்று முன்னால் சென்ற லாரியை முந்தி சொல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த உதயகுமார் மற்றும் சேட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car twowheeler accident in karur