காரை திருட ஓட்டுனரை சம்பவம் செய்வோம்.. திருட்டு கும்பலின் பகீர் தகவல்.!!
Car thief arrest by police shocking his robbery attempt
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி சூரமங்கலம் பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதுகுறித்த புகார்கள் அடுத்தடுத்து காவல்துறையினருக்கு வரவே, இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இரவு நேரங்களிலும் காவல்துறையினரின் கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த பாலாஜி மற்றும் கார்த்திகேயன் நபர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவரும் பெரம்பலூரை சேர்ந்த விமல்ராஜ் மற்றும் மதுக்கரை பகுதியைச் சார்ந்த குமார் என்பவருடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து விமல்ராஜ் மற்றும் குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணையை முடித்து திரும்பிய சமயத்தில், காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த விமல் மற்றும் ராஜ் குமார், பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது ஏறி ஓட முயன்றனர்.
இந்த சமயத்தில், இவர்கள் இருவரும் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தனர். இதில் விமல்ராஜூக்கு இடது கையிலும், குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்ட காவல்துறையினர், அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் கூறிய சமயத்தில், இவர்கள் இருவரும் காரை திருடுவதற்காக, கார் ஓட்டுநரை கொலை செய்து, பின்னர் அந்த கார்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரை, சங்ககிரி பகுதியில் வைத்து கொலை செய்து, காரை காரை சித்தூரில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது எட்டு கொலை வழக்குகள் ஏற்கனவே இருக்கிறது என்று கூறியுள்ளனர்.பதிவாகியுள்ள நிலையில் இவர்களை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Car thief arrest by police shocking his robbery attempt