லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.!
Car lorry accident in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வந்தாரவல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி அவரஞ்சி. இவர்களுடைய மகன் பழனி. இந்நிலையில் இவர்கள் உறவினர்களான தங்கவேல், மகாலிங்கம் ஆகியோருடன் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருக்கோவிலூர் நோக்கி காரில் சென்றனர்.
பின்பு அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, செங்கம் அருகே பெங்களூருவில் இருந்து வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சின்னப்பையன் மற்றும் அவரது மனைவி அவரஞ்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பழனி மற்றும் உறவினர்கள் தங்கவேல், மகாலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மேல் செங்கம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car lorry accident in Tiruvannamalai