கார் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் படுகாயம்
Car lorry accident in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஒண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(58). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(62) என்பவரும் மகாராஷ்டிராவில் இருந்து ஈரோட்டிற்கு கோழி தீவனம் ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கார் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(62), அவரது மனைவி கலா(56) மற்றும் லாரியில் இருந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car lorry accident in dharmapuri