இன்று வேளாங்கண்ணி பெரியதேர் பவனி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!!
car festival held in Velankanni without devotees
வேளாங்கண்ணி மாதா நவநாள் தேர்பவனி இன்று பக்தர்கள் இன்றி நடைபெறவுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்துக்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து அதிக வருகை தருவர். இந்நிலையில், இந்த ஆலயத்தின் நடைபெறும் நவநாள் விழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகைதருவர்.
இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நவநாள் விழா நடைபெறும் என அரசு தெரிவித்திருந்தது. அதே போல கடந்த 29 தேதி நவநாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தேர்பவனி கடந்த பத்துநாட்களாக ஆலயத்தின் உட்புரத்தில் மட்டும் நடைபெற்றது.
இதில், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், பேராலய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நவநாள் திருவிழாவின் முக்கிய பெரிய தேர்பவனி இன்று மாலை பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது.
English Summary
car festival held in Velankanni without devotees