சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 51). மனைவி சாந்தி லட்சுமி. இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்றனர்.

பின்பு மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, உப்போடை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், காரில் இருந்த பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த சாந்திய லட்சுமி அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car crashes into roadside tamarind tree in virudhunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->