காரில் சென்ற குடும்பத்தை புரட்டி போட்ட கோர விபத்து..! நொடியில் அரங்கேறிய துயரம்..!
car accident in madurai district
தமிழகத்தின், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள கப்பலூரைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, வழியில் கரட்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பார்த்த சமயத்தில் தீடிரென இரு சக்கர வாகனம் ஒன்று எதிரே வேகமாக வந்தது. எல்லை மீறிய வேகத்தில் வந்த அந்த பைக் கண்டிப்பாக கார் மீது மோதும் என்று எண்ணிய கார் ஓட்டுநர், பைக் மீது மோதாமல் இருக்கக் காரை திருப்பிருக்கிறார்.
இதை தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் பிரண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் இருந்த பத்து வயது சிறுவன் சக்திவேலுக்குப் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் இருந்த 10 பேர் படுகாயப்படைத்துள்ளார்கள். இதை தொடர்ந்து, முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நடந்த இந்த கோர விபத்து அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
car accident in madurai district