கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
Car accident in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலை பகுதியில் சேர்ந்தவர் சக்திவேல் (29). இவர் தலைவாசல் நோக்கி நண்பர்களான ரவிச்சந்திரன், பிரசாத் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்பு அங்கிருந்து மீண்டும் மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
இதையடுத்து சக்திவேல் எழுந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக சக்திவேல் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Car accident in kallakurichi