அரியலூர் || கார் மோதிய விபத்தில் தந்தை பலி.! மகன் படுகாயம்.!
Car accident in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் மூர்த்தியான் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார்(35). இவருடைய மகன் பாலமுருகன் (6). இந்நிலையில் நேற்று செந்தில்குமார், அருகிலுள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை ஓட்டுவதற்காக வீட்டில் இருந்து தனது மகனுடன் சென்றுள்ளார்.
அப்பொழுது திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் காவல்துறையினர் உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.