#அரியலூர் || கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்துள்ளனர். 

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், பருக்கல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன்(26) மற்றும் தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த தினேஷ்(17) என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in Ariyalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->