எடப்பாடியார் மாவட்டத்திலேயே எல்லை மீறும் விஷயம்.! முடிவிற்கு வருமா..?! - Seithipunal
Seithipunal


தனியார் பேரூந்துகளினால் அதிகப்படியான விபத்துகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் அதிகமாக ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சேலம் மாவட்ட வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் காலையில் கெங்கவல்லி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டதன் காரணமாக மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த கொடூர விபத்து நிகழ காரணமாக இருந்த அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இது போன்று பல தனியார் பேருந்துகள் கட்டற்ற வேகத்தில் சென்று அதிகப்படியான விபத்துக்களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. தனது மாவட்டத்திலேயே இதுபோல அதிகமாக நடக்கும் விபத்துகளுக்கு முதல்வர் பழனிசாமி ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா.? என்பது பொது மக்களின் கேள்வியாக இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus accident in salem district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->