சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட சித்தப்பா.. வெட்டி சாய்த்த தந்தை..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியை சேர்ந்தவர் பாண்டி. இவர் தனது மனைவியை பிரிந்து 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். 

இதை தொடர்ந்து, அவரது தம்பியான சம்பத் ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி வீட்டிற்குள் சிறுநீர் கழித்த காரணத்தால், கடும் கோபத்தில் இருந்த சிறுமியின் சித்தப்பா சம்பத் கடுமையான சொற்களால் திட்டியிருக்கிறார்.

இதன் காரணமாக, கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டி சனிக்கிழமை அன்று இரவு முழுக்க குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதிகாலையில் தூக்கத்தில் இருந்த அவரது தம்பி சம்பத்தை, போதை தலைக்கேறிய நிலையில் பாண்டி அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால், கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் பலத்த காயமடைந்த சம்பத், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து, பாண்டி, திருநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரை கைது செய்த திருநகர் போலீசார், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாதாரண குடும்பத் தகராறுக்காக சொந்த அண்ணனே தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் இச்சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother murder in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->