மனைவியுடன் தகராற்றில் ஈடுப்பட்ட தம்பியை கொன்ற அண்ணன்.. அரியலூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் தகராற்றில் ஈடுப்பட்ட தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் . இவருக்கு திருமணமாகி ரதி அழகி என்ற மனைவியும்2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது தம்பி ரமேஷூடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். முருகானந்தம் திருச்சியில் உள்ள அலுமினிய கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், முருகேசன் வீட்டில் இல்லாத நேரத்தில் அண்ணி ரதிஅழகியிடம்,  ரமேஷ் தன்னுடைய சொத்தை பிரித்து தருமாஉ தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அடுத்து, கணவனுக்கு அழைத்த ரதிஅழகி வீட்டிற்கு வர சொல்லியுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த முருகானந்தத்துக்கும் அவரது தம்பிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே  அங்கிருந்த உலக்கையால் ரமேஷை தாக்கியுள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முருகானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother killed His younger Brother Near Ariyalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->