தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்!! நெகிழ்ச்சி சம்பவம்!! - Seithipunal
Seithipunal



திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார் என்பவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் கனிமொழிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடந்துள்ளது. 

இந்தநிலையில் இவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்டு நேற்று திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜன் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விஷயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்ததால். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரி கனிமொழி திருமணம் நின்று விடும் என நினைத்த கனிமொழியின் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை ராஜகுரு- கனிமொழியின் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை கூறியதால் அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது. இதைக்கேட்ட கனிமொழி,அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தனது சகோதரி திருமணத்திற்காக தந்தை இறந்த செய்தியை மறைத்த அண்ணனின் தியாகம் அனைவரையும் நெகிழவைத்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother hide his father death for his sister marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->