தர்மபுரி அருகே பரிதாபம்.! லாரிகளுக்கு இடையே சிக்கி அண்ணன் - 2 தங்கைகள் பலி - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் லாரிகளுக்கு இடையில் சிக்கி அண்ணன், இரண்டு தங்கைகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன். இவருக்கு மணிகண்டன் (35), லாவண்யா (25), இந்துமதி (20) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் லாவண்யாவிற்கு பல் சிகிச்சைக்காக, மணிகண்டன், லாவண்யா மற்றும் இந்துமதியை மொபட்டில் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார்.

அப்பொழுது பெரியாம்பட்டி அருகே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வெங்காயம் ஏற்றி வந்த லாரி இவர்களது மொபட்டின் பின்பக்கம் மோதியது. இதில் மொபட் முன்னே சென்ற கண்டைனர் லாரி மீது மோதி லாரிகளுக்கு இடையே சிக்கி மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இதில் லாவண்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother and 2 sisters killed in lorry accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->