கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவர்கள் பலி., சோகத்தில் மூழ்கிய கிராமம்..!! - Seithipunal
Seithipunal


கல்குவாரியில் குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியிக்ல் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் சக்தி(10). தனது நண்பன் தங்கபிரபுவுடன் அங்குள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக  அந்த பகுதியில் பெய்து வருவதால்  அந்த குட்டையில் அதிக அளவு நீர் தேங்கியுள்ளது. அது மட்டுமின்றி அது ஊற்று பகுதியாக இருந்ததாலும் நீர் அதிகம் இருந்துள்ளது.

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் குளித்து கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர் திடீரென அவர் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட பெண் ஒருவர் சத்தம் போடவே அருகில் உள்ள அனைவரும் வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

ஆனால், அதற்குள் சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boys drown and die Near Thirunalveli


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->