காதலியை நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர காதலன்..! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நூற்பாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணுடன் பணியாற்றி வந்த பால்ராஜ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண்ணை தான் தங்கி இருக்கும் அறைக்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த பெண்ணும் தனது காதலன் தானே என நம்பி அந்த அறைக்கு சென்றுள்ளார்.

அறைக்கு வந்த அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boyfriend who sexually abused girlfriend with friends


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->