காதலியை இழிவாக பேசிய நண்பரின் தலையை துண்டித்த காதலன்.!
boyfriend killed head of his friend insulted his girlfriend
தனது காதலியை தரக்குறைவாக பேசிய நண்பரின் தலையை சிதைத்து காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கேளம்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அருகே உள்ள குப்பைக் குவியலில் தலை சிதைக்கப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உயிரிழந்த நபர் லட்சுமிகாந்த் (வயது 20) என்கிற இளைஞர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து லட்சுமி காந்தின் நண்பர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், லட்சுமிகாந்த் நண்பரான பிரதீப் காதலிக்கும் பெண்ணை அவர் தரக்குறைவாக பேசியதால் பிரதீப் லட்சுமிகாந்தின் தலையை சிதைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
boyfriend killed head of his friend insulted his girlfriend