தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிபட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்றம் மாரியப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் இழப்பிடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy sexual Harrasment to 5 years old girl in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->