தாலிக்கட்ட மறுத்த காதலன்.. காதலியின் அதிரடி முடிவு.. அடுத்த நிமிடமே நடந்த காரியம்..!
boy marriage girl in police station
சிவகாசியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அரூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் அருண்குமார். இவர்கள் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபகாலமாக அருண்குமார் ராஜேஸ்வரியிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். மேலும் ராஜேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ள அருண்குமாரிடம் கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு அருண்குமார் எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் உயர் அதிகாரியான அருண்குமாரின் வீட்டில் பெண் பார்த்து வருவதாக, ராஜேஸ்வரியின் தோழிகள் கூறியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மகளிர் காவல் நிலையத்தில் அருண்குமார் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் பிரச்சினை முடிந்த மாதிரி தெரியவில்லை.
இதனால் ராஜேஸ்வரி ஆத்திரத்தில் காதலனிடம் தனக்கு தாலி கட்டாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை தொடர்ந்து அருண்குமாரை அழைத்து பேசியுள்ளார்.
இதை தொடர்ந்து வேறு வழியின்றி திருமணத்திற்கு அருண்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின்னர் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
English Summary
boy marriage girl in police station