ஈரோடு: டிராக்டர் மோதி சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் டிராக்டர் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்கதிரேசன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு பொன் வெற்றி தமிழ்(10), பொன் கவின் தமிழ்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பொன் வெற்றி தமிழ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், பொன்கவின் தமிழ் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பொன் வெற்றி தமிழ் வெங்கமேடு-நாகம நாயக்கன் பாளையம் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்போது அந்தவழியாக கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக பொன்வெற்றி தமிழ் மீது மோதியது. இதில் சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான். அப்பொழுது டிராக்டரின் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கொடுமுடி போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy killed in tractor collision in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->