சிறுவனின் உயிரை பறித்த சரக்கு ரயில்.. கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Boy killed in freight train collision
தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விஜயமாநகரம் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் (17). இவர் தனது நண்பரகளுடன் சென்னை விருத்தாசலம் இருப்பு பாதையில் பேசி கொண்டே கடக்க முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாரமல் வந்த சரக்குரயில் சிவனேசன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
English Summary
Boy killed in freight train collision