முன்னாள் காதலியுடன் ஆற்றங்கரையில் இறுதி சந்திப்பு..! துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.!
boy killed his ex lover in river
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே திருமங்கை என்பவர் தள்ளுவண்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவருடைய கடையில் தினமும் தனபால் என்பவர் சாப்பிட வந்து கொண்டிருந்த காரணத்தால் அவரை காதலித்து இருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு திருமங்கை கடையை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று இருக்கின்றார்.
அப்பொழுது அங்கே ரமேஷ் என்பவரை சந்தித்து அவருடன் நட்பு ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக தனபால், திருமங்கையை பழிவாங்க திட்டமிட்டு இருக்கிறார். அப்போது அவரிடம் ஒரே ஒருமுறை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டு பெண்ணை வரவழைத்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் மூலனூர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் சந்தித்து பேசுவதாக திட்டமிட்டுள்ளனர். அதன்படி இருவரும் அங்கே சென்று இருக்கையில் தன்னுடைய முன்னாள் காதலியை தனபால் கொலை செய்து உடலை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கின்றார்.
இந்நிலையில், ரமேஷ் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையின் தீவிர விசாரணையில் திருமங்கையின் உடல் ஆற்றங்கரை அருகே இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
boy killed his ex lover in river