கழிவறை ஓட்டையில் சிக்கிய கை.! மூச்சுத்திணறி வாலிபருக்கு நேர்ந்த கதி.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (29) என்பவர் தன்னுடைய சொந்த காரர்களுடன் மதுரைக்கு சென்று இருக்கின்றார். அப்போது மதுரை பெத்தானியாபுரம் நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் நிரப்பி இருக்கின்றார். 

அப்பொழுது அந்த பங்கில் இருந்த கழிவறைக்கு சென்ற பொழுது மணிமாறனின் சட்டைப்பையில் இருந்த கார் சாவி கழிவறை குழிக்குள் விழுந்து இருக்கின்றது. அதனை எடுக்கும் நோக்கில் மணிமாறன் கையை குழிக்குள் விட்டு இருக்கின்றார். ஆனால் அவரால் மீண்டும் கையை வெளியே எடுக்க முடியவில்லை. 

இதன் காரணமாக நீண்ட நேரம் போராடி ,அதன் பின்னர் அவர் சத்தம் போட்டு இருக்கின்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பின்னர், மதுரை நகர தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். 

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கழிவறை கோப்பையுடன் உடைத்து மணிமாரணை மீட்டு எடுத்தனர். மயக்கமடைந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy gear about toilet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->