மழை நீர் சேகரிப்புத் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி..!
boy death fell down in rain water saving tank
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ஆம்பூர் அருகில் வீட்டில் கட்டப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்புத் தொட்டி ஒன்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திருக்கிறது.
சிவகாசி அருகே கோவில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் ருத்ரன் (3). இவர் அம்பத்தூரில் ஒண்டிப்புலி நாயக்கனூரில் இருக்கின்ற தாத்தா மணிகண்டன் வீட்டுக்குச் சென்றார்.
இன்று காலை நேரத்தில் வீட்டின் அருகில் சிறுவன் ருத்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். வெகுநேரமாக சிறுவனை காணாததால் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றிலும் தேடியிருக்கிறார்கள்.
தொடர்ந்து தேடி இருந்த சமயத்தில், அப்பொழுது வீட்டின் பக்கத்திலே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் தவறி விழுந்து இருந்த சிறுவன் ருத்ரன் என தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவன் ருத்ரனை மீட்டு ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றார்கள். பின்னர் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ருத்ரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இம்மாதிரியான சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது பெற்றோர்களின் கவனக்குறைவால் நிகழ்கிறது. இது குறித்து யார் மீது குற்றசாட்டு வைத்தாலும் இழப்பு பெற்றவர்களுக்கு தான் என்பதை உணர்ந்து இது போல ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதையும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
English Summary
boy death fell down in rain water saving tank