இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. சிறுவன் பரிதாப பலி..திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Boy Death Accident Near Thiruvarur
டிராக்டெர் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நுணாக்காடு பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மகன் தினேஷ் கோடை விடுமுறைக்காக ஆலத்தூர் கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று விட்டு சம்பவத்தன்று அவர் வீடு திரும்பியுள்ளார். மேட்டுப்பாளையம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அவர்கள் எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மாமா குமரேசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரைவாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Boy Death Accident Near Thiruvarur