காதலி இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!! கோவையில் நடந்த சோகம்...!!
Boy commits suicide in grief over girlfriend's death
காதலி இறந்த விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த பெண் சில மாதங்களுக்கு தற்கொலை முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ரவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலி இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Boy commits suicide in grief over girlfriend's death