பிஞ்சிலே பழுத்தது, இவ்ளோ சின்ன வயதில் இப்படியா.? கதறி அழும் பெண்கள்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ் என்பவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு சத்யா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஒன்றரை மாதத்திற்கு முன்பு சந்தோஷ் திடீரென காணாமல் போயிருக்கிறார். இதுகுறித்து சத்தியா பலரிடமும் விசாரித்தார். தகவல் எதுவும் தெரியவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சந்தோஷின் மொபைல் போனை வைத்து அவர்க் கீழையூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் காவல்துறையினர் சத்யாவுடன் அங்கு சென்று விசாரித்ததில் அவர் சசிகலா என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் சந்தோஷினை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொழுது, அவர் மொத்தம் எட்டு பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களை தனித் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து இருக்கின்றார்.சந்தோஷிடம் ஏமாந்த எந்த ஒரு பெண்ணிற்கும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரியாமலே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் பல பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சினிமாவை மிஞ்சிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy cheating many girls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->