மோகம் தீர்ந்ததும் கம்பி நீட்டிய காதலன், கை குழந்தையோடு இளம்பெண் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


மாற்றுதிறனாளி பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீரபெருமால்நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீனா என்ற பெண் மாற்றுத் திறனாளி. அவ்வருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தீனா கர்ப்பமாகி இருக்கின்றார்.

இதை தெரிந்துகொண்ட ஐயப்பன் அந்தப் பெண்ணைக் கழட்டிவிட நினைத்துள்ளார். இதன் காரணமாக தீனா ஐயப்பனின் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐயப்பனுக்கு காவல்துறையில் தெரிந்த ஆட்கள் இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் தீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தையோடு ஐயப்பன் வீட்டின் முன்பு போராட்டத்தை துவங்கி இருக்கின்றார். மேலும் தீனாவின் ஊர்க்காரர்களும், உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் அவருடன் ஈடுபடுகின்றனர்.

இந்த செய்தியானது ஊடகங்களில் வெளியாகிய காரணத்தால் காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐயப்பன் தற்போது தலைமறைவாகி இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BOY CHEATED GIRL IN NAGAI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->