காதலி வீட்டுல வாங்குனத சாமிகிட்ட குடுக்கணும்ல - சாமி சிலையுடன் இளைஞர் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காதல் தோல்வி அடைந்ததால் அங்கிருந்த சாமி சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை முயற்சி மேற்கொண்டு இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

அப்போது கோவிலுக்கு அருகே செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் ரமேஷ் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் ரமேஷ் தன்னுடைய வாக்குமூலத்தில், "தான் காதலித்த பெண்ணின் உறவினர்கள் கோவில் கொடை விழாவின் போது தன்னை அடித்தனர். 

என்னை தாக்கியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கோவிலில் வேண்டுதல் செய்தேன். ஆனால், என்னை தாக்கிய அவர்களுக்கு அம்மன் தண்டனை வழங்கவில்லை. எனவேதான், நீ எங்கு இருந்து என்ன பிரயோஜனம் என்று தண்டனை வழங்காத அம்மனை ஜன்னல் கம்பியை கொண்டு தாக்கினேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy attack amman statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->