சென்னையில் வெடிகுண்டு வீச்சு பட்டப்பகலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. இந்த தெரு மிகவும் பரபரப்பாக காணப்படும்.

இந்தநிலையில்,  இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சில மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர். அரிவாளால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசியுள்ளார். இதன் பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் ரிச்சி தெருவில் பதற்றம் உருவானது.
 
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தாக்கப்பட்ட அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் மூன்றாவது மனைவி என்றும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. 

மேலும், தாக்குதல் நடத்திவிட்டு சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb blast in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->